நான் வந்த பாதை எனக்கு நினைவிருக்காது, தடயங்களைப் பலநேரம் அழித்து விடுவேன். நான் தொடர்ந்து முன்னேறுவதாகவும், பின்னே விடப்பட்டவை அவ்வளவு போதாதவை என்பதும் ஒரு conceit.
ஆனால் பல நேரம் நான் முன்னே எழுதியவை இப்போது கருதுபவற்றை விட மேலானதாகக் கண்டிருக்கிறேன்.
இருந்த போதும் வாழ்க்கைச் சாரம் என்றெடுத்தால் நிச்சயமாக இப்போது எனக்கிருக்கும் அறிவு / புரிதல் முன்னெப்போதையும் விட மேலான தளத்தில் இருக்கிறது என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
இந்தப் புரிதல் எவ்வளவு உருப்படியானது என்பதில்தான் ஐயம். மேஜையில் ஒரு வண்டி புத்தகங்கள். அவற்றில் பலர் சிறந்த எழுத்தாளர்கள். இவர்களோடுதான் ஒப்பீடு என்பதால் தினம் தாழ்வு மனப்பான்மை வராமல் இருப்பதே பெரும் பாடாக இருக்கிறது.











0 மறுவினைகள் இது வரை ↓
இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.